பொலன்னறுவையில் பக்தர்களுடன் விபத்தில் சிக்கிய பேருந்து: 12 பேர் காயம்

பொலன்னறுவை – சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் இருந்து ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு சோமாவதிய புனித பூமியை நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது.

விபத்தின் போது பேருந்தில் 24 பேர் பயணித்துள்ளனர்.

பேருந்திற்குள் சிக்கியிருந்தவர்களை கந்தகாடு இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் புலஸ்திபுர பொலிஸார் இணைந்து மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் 8 பேர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலும், ஏனைய நால்வர் புலஸ்திபுர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் புலஸ்திபுர பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்