ஈரானில் 25 ஆவது நாளை எட்டிய நாடு தழுவிய இணைய முடக்கம்!

ஈரானிய அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய இணைய சேவை முடக்கம் இன்றுடன் (மார்ச் 24) 25 ஆவது நாளை எட்டியுள்ளதாக சர்வதேச இணைய கண்காணிப்பு அமைப்பான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த இணைய முடக்கம் தற்போது 576 மணித்தியாலங்களைத் தாண்டியுள்ளது.

இந்தத் திட்டமிட்ட முடக்கத்தினால் ஈரான் நாட்டு மக்கள் வெளிவுலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமான பாதுகாப்புத் தகவல்கள் அல்லது அவசர அறிவிப்புகளைப் பெறுவதற்குக் கூட வழியின்றி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வைட் லிஸ்ட்’ எனப்படும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

இதன் மூலம் செய்திகளைத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்க ஈரான் அரசு முயற்சிப்பதாக ‘NetBlocks’ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டே இணையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் குரல் சர்வதேச மட்டத்தை எட்டவிடாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!