சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர்  படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ். தென்மராட்சி கெற்பேலி, வீரபத்திரர் கோவிலடியில் இன்று(28) காலை 8:25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் பொலிசார் இருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இதன் போது மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை வழி மறித்துள்ளனர்.

உழவு இயந்திரம் நிறுத்தாது பொலிஸ் உத்தியோகத்தர்களை மோதி தள்ளியதோடு நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் காயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து கிளாலியில் வைத்து உழவு இயந்திரத்தை கைப்பற்றியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில்  ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய ஹெட்டியாராட்சிக்கே அல்பேட் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!