தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

ஆழ்வார் பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஸ்டாலினை சந்திக்கச் சென்ற முதலமைச்சர் விஜயை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆறத் தழுவி இன்முகத்தோடு வரவேற்றார்.
மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
இதன்போது, விஜய் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
இந்தக் கலந்துரையாடலின்போது, தமிழக அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
