இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

university of jaffna
யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!
tvk
ஆளுநருக்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம்: நாளை களம் இறங்குகிறது காங்கிரஸ்!
1144
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!
tvk
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை.
chandrika bandaranaike
விஜய்க்கு வாழ்த்து மடல் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!
katchatheevu
விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்