21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மதுபானசாலைகளின் பணியாளர்களுக்கு, நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், ஆதார் அட்டை, சாரதி உரிமம் உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்நடவடிக்கை, குறைந்த வயதினரிடையே மதுபான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

university of jaffna
யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!
tvk
ஆளுநருக்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம்: நாளை களம் இறங்குகிறது காங்கிரஸ்!
1144
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!
tvk
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை.
chandrika bandaranaike
விஜய்க்கு வாழ்த்து மடல் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!
katchatheevu
விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்