வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பு நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷாங்க்ஸியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த நேரத்தில் 247 ஊழியர்கள் அங்கு பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் மீட்புப் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
