நேற்றுமுன்தினம் இரவு நாவற்குழி பகுதியில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டதாக நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்றுவிட்டு அதனை அடைப்பதற்கு வாங்கிய பணத்தின் பல மடங்கு பணமானது செலுத்தப்பட்டும் கடன் தீரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வட்டிக்கு பணத்தினை பெற்றவர்களுக்கும், கொடுத்தவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில், அன்றிரவு அங்கு வந்த வன்முறை கும்பலால் பணத்தினை பெற்றவரது வீடு மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
