2008-ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட பிரதிவாதிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதன்படி, ஆயுள் தண்டனைக்கு எதிராக பிரதிவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தபோது, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிய வருகையில்,

2008 ஒக்டோபர் 6ஆம் திகதி அனுராதபுரம் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலில் மொத்தம் 28 முதல் 31 பேர் வரை கொல்லப்பட்டனர்.
மேஜர் ஜெனரல் ஜனக் பெரேரா (ஓய்வு), அவரது மனைவி உட்பட பலர் உயிரிழந்திருந்தனர்.
இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி உள்ளிட்டோருக்கு அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கின் முதல் பிரதிவாதிக்கு 2014ஆம் ஆண்டு 20 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
இதன்படி இரண்டாவது பிரதிவாதியாக அடையாளம் காணப்பட்ட நபர், குற்றச்சாட்டுகளை மறுத்திருந்ததோடு, வழக்கு மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
