மட்டக்களப்பு சிறைச்சாலையில் இளைஞனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிசெய்துள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
