வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலக உறுப்பினர்களின் இரகசியக் குரல் பதிவு கசிந்தது!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இது குறித்து பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தியுள்ளனர்.

சுமார் 22 நிமிடங்கள் நீடிக்கும் இந்த உரையாடலில், ரசல் ஸ்மித், பிரெஞ்சு ரூபன், இங்கிலாந்தின் குடு லால் மற்றும் வெல்லே சாரங்க ஆகிய நான்கு குற்றவாளிகளே கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ‘வெல்லே சாரங்க’ என்பவரை அந்த நாட்டு பொலிஸார் நடத்திய விதம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் அந்நாட்டுப் பிரஜைகளைத் தாக்குவதற்கு, இலங்கையிலுள்ள தனது சகாக்களைத் தூண்டுவது தொடர்பாக ரசல் ஸ்மித் இந்த உரையாடலில் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

crime
கொழும்பின் புறநகர் பகுதியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி!
namal
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
tiktok
இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
srilanka
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையா?
gold price
உலக சந்தையில் வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
gold price
இலங்கையில் இன்று 4 இலட்சத்தை கடந்தது தங்க விலை!