பேருந்தின் மிதி பலகையிலிருந்து விழுந்த மாணவன்! போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை!

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியான செயல்பாடுகளே விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தின் மிதி பலகையில் இருந்த மாணவர் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இது குறித்து உரிய தரப்பு கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ct-scan
பெண்ணின் வயிற்றில் 30 வருஷமா இருந்து கல்லாக மாறிய குழந்தை! மெய்சிலிர்க்கும் அதிசயம்
fire-jaffna
பற்றியெரிகிறது கல்லுண்டாய்! இரவிரவாகப் பெரும் பதற்றம்! சுவாசப் பிரச்சினைகளால் மக்கள் அவதி
Vimal-weerawansa
செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் - சபா குகதாஸ் தெரிவிப்பு!
army
விடுவிக்கப்பட்ட பலாலி அம்மன் ஆலயம் மீண்டும் இராணுவத்தால் தடைசெய்யப்பட்டது - வருத்தப்பட்ட மக்கள்!
nagathmbiran-movil
35 வருடங்களின் பின் இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட நாகதம்பிரான் ஆலயம்
twitter-killer
அபார்ட்மென்டில் துண்டு துண்டாக 9 உடல்கள்.. ஜப்பானை அலறவிட்ட 'ட்விட்டர் கொலையாளி' - தூக்குதண்டனை நிறைவேற்றம்