ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில், எந்தவொரு வெளிநாடும் பங்கேற்பதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
குறித்த பணியை மேற்கொள்ள ஈரான் மட்டுமே முழு உரிமையைக் கொண்டுள்ளது என்று ஈரான் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 5-வது பிரிவின் கீழ், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு மட்டுமே உள்ளது.
சர்வதேச அளவில் ஈரான் கையிலிருக்கும் மிக வலிமையான துருப்புச் சீட்டு இதுவாகும்.
இதில் பிற நாடுகள் தலையிடுவதன் மூலம், தங்கள் கட்டுப்பாடும் செல்வாக்கும் குறைந்துவிடும் என்பதால், இந்த விவகாரத்தில் ஈரான் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
