பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்: ஆட்சியை தக்க வைத்தது தவெக

தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது, அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள். அதன்பின் முதலமைச்சர் விஜயும் பேசினார்.

சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். சட்டசபை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் டிவிஷனில் 30 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

2 ஆவது டிவிஷனில் 42 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

3 ஆவது டிவிஷனில் 46 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

4 ஆவது டிவிஷனில் எஸ்.பி.வேலுமணி தரப்பு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

5 மற்றும் 6 ஆவது டிவிஷன்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் த.வெ.க. அரசை ஆதரிப்பதாக 144 பேர் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது.

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

university of jaffna
யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!
tvk
ஆளுநருக்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம்: நாளை களம் இறங்குகிறது காங்கிரஸ்!
1144
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!
tvk
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை.
chandrika bandaranaike
விஜய்க்கு வாழ்த்து மடல் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!
katchatheevu
விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்