பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்: ஆட்சியை தக்க வைத்தது தவெக

தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது, அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள். அதன்பின் முதலமைச்சர் விஜயும் பேசினார்.

சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். சட்டசபை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உறுப்பினர்களை எழுந்து நிற்கவைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் டிவிஷனில் 30 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

2 ஆவது டிவிஷனில் 42 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

3 ஆவது டிவிஷனில் 46 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

4 ஆவது டிவிஷனில் எஸ்.பி.வேலுமணி தரப்பு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

5 மற்றும் 6 ஆவது டிவிஷன்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் த.வெ.க. அரசை ஆதரிப்பதாக 144 பேர் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது.

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!