நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 36 மணித்தியாலங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றிரவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
