மனித எலும்புக் கூட்டு எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு!

வெயாங்கொடை – நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மனித எச்சங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிசார் மீடடுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டின் வாகனங்களை நிறுத்தும் இடத்தை ஒட்டிய ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்திருந்தது.

இந்தநிலையில் கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த நிலமானது, சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வைத்தியர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்

இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்