மனித எலும்புக் கூட்டு எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு!

வெயாங்கொடை – நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மனித எச்சங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிசார் மீடடுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டின் வாகனங்களை நிறுத்தும் இடத்தை ஒட்டிய ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்திருந்தது.

இந்தநிலையில் கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த நிலமானது, சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வைத்தியர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்

இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!