போதைப்பொருளுடன் சிக்கிய NPP உறுப்பினரின் கணவர்! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நகர சபை உறுப்பினரின் கணவர், தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மேலதிக விசாரணைக்காக நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பாடசாலை அதிபர், இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்போது, சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி, நகரசபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா, பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என்பதையும் காவல்துறையினர் வெளிப்படுத்தினர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பாடாசலை அதிபரின் சொத்துக்கள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.185 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!