இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிற்கு எழுத்து மூல ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்று (23) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “ இந்த ஆவணங்களை ஐ.நாவிற்கு செல்லாமல் தடுப்பதற்காக பல சதித் திட்டங்கள் திட்டமிடப்படுகின்றன” எனக் கூறினார்.
மேலும், இலங்கையில் புதிய அரசாங்கம் வந்தவுடன் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என சில தரப்பினர் காட்ட முயல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,