லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள். கடந்த 16 ஆம் திகதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாகத் தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன.

இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், :எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபா லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமனிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஜோசப் விஜய் தானே ஒரு அரசு ஊழியரைப் போல உரிய நேரத்திற்கு அலுவலகம் வந்து பணியாற்றுகின்றமை அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பணத்தை நான் ஒரு பைசா கூட தொடமாட்டேன் என்று உறுதியளித்துள்ள அவர், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்க இலக்கு வைத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்