அரசாங்கத்திற்கான வாகனங்கள் கொள்வனவு செய்வது தற்காலிகமாக நிறுத்தம்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட வேண்டியிருந்தது.

அதன் விளைவாக, எரிபொருள் நுகர்வு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். எரிபொருளுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது அவசியம்.

அதன்படி, வரும் காலத்தில் அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!