கொலை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (24)இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
எம்பிலிப்பிட்டிய, முல்லகஸ்யாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு பொதுமகன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்களுக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
