3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது

இரண்டு வேறுபட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (24) மதுகம – வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (25) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

அதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, தலவாக்கலை – கிரேட் வெஸ்டன் மலையின் உச்சியில் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலுமே இவர் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபராவார்.

மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் இரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லிந்துலை பொலிஸாரினால் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த சந்தேகநபர், இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் லிந்துலை பொலிஸாரும் தலங்கம பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!