🔴 VIDEO செம்மணியில் ஏற்றப்பட்டது “அணையா தீபம்”!

புதிய இணைப்பு

படுகொலைகளுக்கு எதிராக செம்மணியில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் #chemmani #tranding #viralnews #srilankatiktok #viralvideos #kajenthirakumar #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #gajendrakumar #trendingpost #jaffna #kannagi_amman_kovil #rajapaksha #chandrasekaran #australiaparliament #bimalrathnayake #gajendrakumarponnambalam

Posted by A7tv News on Monday, June 23, 2025

இரண்டாம் இணைப்பு

செம்மணியில் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம்  ஏற்றபட்டது.

தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையில் குறித்த விடையத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதுடன் அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுதுத்தும் வகையில்

மக்கள் மயப்படுத்தப்பட்ட இந்த ‘அணையா தீபம்’ போராட்டம் இன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால்  சுடரேற்றி ஆரம்பித்துவைக்கப்பது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில், முன்னெடுக்காட்டுள்ள இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அபைப்பின் பிரதினிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து மலர் தூவி அஞ்சலித்தனர்.

குறிப்பாக செம்மணி மண்ணில் புதையுண்டுபோன உறவுகளுக்கு,   நீதி வேண்டிய போராட்டமாக ‘அணையா தீபம்” என்ற பெயரில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது  23,24,25 ஆகிய  3 நாள்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ். வருகைதரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை

வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்ததணி வைஸ்ணவி சண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிக்குடத்தக்கது.

முதல் இணைப்பு

யாழ்ப்பாணம் – செம்மணியில் ‘அணையா தீபம்’ மூன்று நாள் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைக்குழி விவகாரத்திற்கு நீதிகோரி மக்கள் செயல் அமைப்பு அணையா தீபம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். 

குறித்த போராட்டமானது அணையா தீபம் ஏற்றி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் உணவு தவிர்ப்பு போராட்டமாக செம்மணி வளைவு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இப்போராட்டம் இரவு பகலாக மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது