ட்ரம்பிடம் நோபல் பதக்கத்தை ஒப்படைத்த வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்!

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ, நேற்று(15) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தாம் பெற்ற நோபல் பரிசு பதக்கத்தை ட்ரம்பிடம் வழங்கியதாக, மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

வெனிசுலா மக்களின் விடுதலைக்காக ட்ரம்ப் காட்டிய உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறினார்.

வெனிசுலாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ட்ரம்பின் ஆதரவைப் பெறுவதற்காக இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, மச்சாடோவை “துணிச்சலான பெண்” என்று பாராட்டிய போதிலும், தற்போதைய நிலையில் வெனிசுலாவை வழிநடத்த அவருக்குப் போதிய ஆதரவு இல்லை என்று ட்ரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!