போதைப்பொருள் விவகாரம்: 23 பிக்குகளுக்கும் மீண்டும் விளக்கமறியல்!

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பிய போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘அமிதானந்த’ என்ற பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத செயலை வழிநடத்தியுள்ளமை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அமிதானந்த என்ற பிக்குவும் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

university of jaffna
யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!
tvk
ஆளுநருக்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம்: நாளை களம் இறங்குகிறது காங்கிரஸ்!
1144
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!
tvk
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை.
chandrika bandaranaike
விஜய்க்கு வாழ்த்து மடல் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!
katchatheevu
விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்