🔴 VIDEO தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழில் குத்தாட்டம் – பல்வேறு தரப்பினரும் விசனம்!

தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான இன்று தென் இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் போடும் காட்சிகளை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்றைய தினம் ஜூலை 23 ல் சகோதரத்துவ நாளாக தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரா தலைமையில் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் பெரும்பான்மை இன மக்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர்.

ஒற்றுமையாய் வாழ்வோம் சகோதராய் வாழ்வோம் என கூறி புகையிரத மூலம் அழைத்து வரப்பட்ட நபர்களுடன் யாழ். நகரப் பகுதி ஒன்றில் அமைச்சர் குத்தாட்டம் போடுவது தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஜூலை 23 தமிழர்கள் வாழ்வில் அழிக்க முடியாத கறை படிந்த நாளாக பார்க்கப்படுகின்ற நிலையில் சகோதரத்துவம் என கூறி மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது குத்தாட்டம் போடுவது ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் கருத்துரைத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!