அலற வைத்த நிலநடுக்கத்தால் ஜப்பானை தாக்கிய சுனாமி: பாபா வங்காவின் கணிப்பு பலித்தது?

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றின் விளைவாக, சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கிய நிலையில், புதிய பாபா வங்காவின் கணிப்பு பலித்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை 8.25 மணியளவில் ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை பயங்கர நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி உருவாக, சுனாமி அலைகள் ஜப்பானின் Hokkaido தீவைத் தாக்கின.

ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அவசர எச்சரிக்கைகள் விடுக்க, நாடு முழுவதும் சைரன் ஒலித்தது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டார்கள்.

இதற்கிடையில், ஜப்பானின் புதிய பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி ((Ryo Tatsuki)யின் கணிப்பு பலித்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

1999ஆம் ஆண்டு தான் எழுதிய ’The Future I Saw’ என்னும் புத்தகத்தில், ஜூலை மாதம் 5ஆம் திகதி தெற்கு ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என குறிப்பிட்டிருந்தார் ரியோ.

2011ஆம் ஆண்டு ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கும் என ரியோ கணிக்க, அதேபோல் ஒரு நிலநடுக்கம் 2011ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது.

ஆகவே, ஜூலை மாதம் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கவிருப்பதாக ரியோ கணித்ததால், ஜப்பானுக்கு சுற்றுலா வர முன்பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ரியோ குறிப்பிட்ட 5ஆம் திகதி பெரிய அளவில் நிலநடுக்கமும் ஏற்படவில்லை என்றாலும், அவர் சொன்னதுபோலவே சுனாமி ஏற்பட்டுவிட்டதே என பலரும் வியக்கிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

crime
கொழும்பின் புறநகர் பகுதியில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட யுவதி!
namal
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
tiktok
இலங்கையில் டிக்டொக் நட்பால் நடந்த விபரீதம்!
srilanka
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையா?
gold price
உலக சந்தையில் வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
gold price
இலங்கையில் இன்று 4 இலட்சத்தை கடந்தது தங்க விலை!