இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தலங்கமா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தரமுல்ல – நாகஹமுல்ல பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ஒருவரால் மற்றொருவருக்கு கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் தலையிலும் உடலிலும் காயமடைந்துள்ளார்.

கடுமையாக காயமடைந்த அவர் இராணுவத்தினரால் தலங்கமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்னி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைக்குற்றத்தில் தொடர்புடைய சந்தேகநபரை தலங்கமா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தலங்கமா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!