இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தலங்கமா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தரமுல்ல – நாகஹமுல்ல பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் ஒருவரால் மற்றொருவருக்கு கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் தலையிலும் உடலிலும் காயமடைந்துள்ளார்.

கடுமையாக காயமடைந்த அவர் இராணுவத்தினரால் தலங்கமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்னி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைக்குற்றத்தில் தொடர்புடைய சந்தேகநபரை தலங்கமா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தலங்கமா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!