பூரண குணமடைந்து நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) காலை நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக அவர் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் (Mount Elizabeth) மருத்துவமனையில் அவர் சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டார்.

சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அவர் மேலதிக உடல்நலக் கண்காணிப்புடன் நாடு திரும்பியுள்ளார்.

சத்திரசிகிச்சையின் பின்னரான தேறுதல் காலம் (Recuperation) என்பதால், அவர் இன்னும் சில வாரங்களுக்குப் பொது நிகழ்வுகளைத் தவிர்த்து முழுமையாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் தனது இல்லத்தில் தங்கியிருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!