தமிழக சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாளை வாக்கெடுப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்து, விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். சபாநாயகராக ஜே.டி.சி. பிரபாகர் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டசபையில் 13-ந் தேதிக்குள் (அதாவது நாளை) நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் அர்லேகர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அதன்படி த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் நாளை சட்டசபையில் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பெரும்பான்மையை நிருபிப்பதில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க உள்ளனர்.இதன் மூலம் தமிழக வெற்றி கழக கூட்டணியின் பலம் 151 ஆக உயர உள்ளது. இதைபோல அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!