கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி மோதிக்கொண்ட இரண்டு பேருந்துகள் – பலர் காயம்!

கொழும்பு – கதிர்காம பிரதான சாலையில், திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை ( 13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நடந்தபோது, ​​பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து அம்பலந்தொட்டையிலிருந்தும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கதிர்காமம் நோக்கியும் சென்று கொண்டிருந்தன.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!