அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றின் கடவுச்சொற்களை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகளிடம் சமர்பிக்குமாறும் சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
