“பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்” – உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை குறிப்பிட்டதாக ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் குறிப்பிட்டார்கள். ஆனால் நீதிமன்றுக்கு அவ்வாறு ஒன்றும் அறிவிக்கப்படவில்லை.

குண்டுத் தாக்குதல்கள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெற்றால் அதை நாங்கள் எதிர்க்க போவதில்லை. ஆனால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் மாத்திரமே தற்போது இடம்பெறுகின்றன.

சுரேஸ் சலே கைது மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி குறிப்பிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி அவரிடம் 10 கேள்விகள் கேட்டிருந்தேன். ஆனால் அதற்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை“ என தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!