இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை! முதல்வர் விஜய்யிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கம் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்கத் தமிழக அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கவும் தமிழக அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!