இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை! முதல்வர் விஜய்யிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையைத் தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கம் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்கத் தமிழக அரசாங்கம் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கவும் தமிழக அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

university of jaffna
யாழ். பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!
tvk
ஆளுநருக்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டம்: நாளை களம் இறங்குகிறது காங்கிரஸ்!
1144
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!
tvk
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை.
chandrika bandaranaike
விஜய்க்கு வாழ்த்து மடல் அனுப்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா!
katchatheevu
விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை? நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்