சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்: தங்க மோதிரத்தை பரிசளித்த சுவிஸ் வாழ் தொழிலதிபர்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மண்ணிற்குப் பெருமை சேர்த்த சாதனை மாணவன் தெ.திருக்குமரனை கௌரவித்த சுவிஸ் வாழ் முதலீட்டாளரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரபல வர்த்தகரும், தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவனருமான முதலீட்டாளர், இம்மாணவனின் அபாரமான கல்விச் சாதனையைப் பாராட்டி அவருக்கு தங்க மோதிரம் ஒன்றினைப் பரிசாக வழங்கியுள்ளார்.

தற்போது புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் அவர், தனது தாரணி சூப்பர் மார்க்கெட் ஊடாக இக்கௌரவிப்பினை நேரடியாக மாணவன் தெ.திருக்குமரனின் அனுப்பி வைத்துள்ளார்

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது சொந்த மண்ணின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கோடும், எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகச் சாதனை படைக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவுனர் மேற்கொண்ட இந்தச் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்