சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்: தங்க மோதிரத்தை பரிசளித்த சுவிஸ் வாழ் தொழிலதிபர்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மண்ணிற்குப் பெருமை சேர்த்த சாதனை மாணவன் தெ.திருக்குமரனை கௌரவித்த சுவிஸ் வாழ் முதலீட்டாளரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரபல வர்த்தகரும், தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவனருமான முதலீட்டாளர், இம்மாணவனின் அபாரமான கல்விச் சாதனையைப் பாராட்டி அவருக்கு தங்க மோதிரம் ஒன்றினைப் பரிசாக வழங்கியுள்ளார்.

தற்போது புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் அவர், தனது தாரணி சூப்பர் மார்க்கெட் ஊடாக இக்கௌரவிப்பினை நேரடியாக மாணவன் தெ.திருக்குமரனின் அனுப்பி வைத்துள்ளார்

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது சொந்த மண்ணின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கோடும், எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகச் சாதனை படைக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தாரணி சூப்பர் மார்க்கெட் நிறுவுனர் மேற்கொண்ட இந்தச் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்