அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி எழுதிய உருக்கமான கடிதம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர் நிறுத்தக் கோரிக்கை குறித்த கூற்றுக்களை மறுத்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அமெரிக்க மக்களுக்கு நேரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஈரான் ஒருபோதும் பிற நாடுகள் மீது போர் தொடுக்கும் ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட நாடு அல்ல என்பதை பெசெஷ்கியான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா உருவாவதற்கு முன்பிருந்தே, ஈரான் எந்தவொரு வெளிநாட்டின் மீதும் தானாக முன்வந்து போரைத் தொடங்கியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்திற்கு ஈரான் அச்சுறுத்தல் என்பது போன்ற தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவும், இது ஈரான் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பொய்யான பிம்பம் என்றும் அவர் சாடியுள்ளார்.

அமெரிக்கா தற்போது இஸ்ரேலுக்காக ஒரு ‘நிழற்போரை’ முன்னெடுத்து வருவது ஒரு துரதிஷ்டவசமான உண்மை என அவர் விபரித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னம் அதிகரித்துள்ள சூழலில், தனது நாட்டைப் பாதுகாப்பதற்கும், அதற்காவே ஆயுதங்களை உருவாக்குவதற்கும் ஈரானுக்கு முழு உரிமை உண்டு என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் ஒரு நட்பு நாடு என்பதையும், தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் தற்காப்பு முயற்சிகளே என்பதையும் அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பை விடுத்து, நேரடியாக அமெரிக்க மக்களுக்கே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளமை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்