இந்தியாவின் மலையாள ராப் இசை பாடகர் வேடன் கைது!

இந்தியாவின் மலையாள ராப் பாடகர் வேடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரன்தாஸ் முரளி மீது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம் மருத்துவர் ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கேரள பொலிசில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், இந்த மருத்துவர் கொச்சி நகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், 30 வயதான வேடன், 2021 முதல் 2023 வரை பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். புகாரின்படி, இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களாகி, பின்னர் வேடன் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் உறவு கொண்டதாகக் கூறியுள்ளார்.

பின்னர், அவர் திருமண வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியதால், தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாக அந்த மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம், பாரதிய நியாய சன்ஹிதா இந்திய தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றுவதற்கு முன்பு நிகழ்ந்ததால், காவல்துறை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (2) [ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!