விமானப் பணிப் பெண்ணை தாக்கிய சவூதி பிரஜை: நீதிமன்றம் வழங்கிய தண்டனை

ரியாதில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானப் பணிப்பெண் ஒருவரைத் தாக்கியமை தொடர்பாக சவூதி அரேபியப் பிரஜையொருவருக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதராகமவினால் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கத் தயாரானபோது, பயணிகள் அனைவரும் இருக்கைப்பட்டையுடன் அமர்ந்திருக்க வேண்டும் என்ற விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சந்தேகநபர் கழிவறைக்குச் செல்ல முயன்றதனால் விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், உடனடியாகத் தகவலறிந்து காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர் தம குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்