தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளைப் புதைக்கப் பயன்படுத்தப்படும் படகுகளைக் குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் கூறியுள்ளார்.
இருப்பினும், தற்போதைய போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா மிகுந்த நிதானத்துடன் செயல்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும், இந்த அமைதி ஒப்பந்தம் எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
