கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன் (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

செய்தி: பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
Driver's license
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்
Annapoorani Amma
யாழ் வர இருக்கும் அன்னபூரணி, அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை!
N836MH
நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்
port city colombo
கொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு!
Ravi Mohan with new projects in Sri Lanka
இலங்கையில் புதிய திட்டங்களுடன் ரவி மோகன்