போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பென்டகன் (Pentagon) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தரைப்படை, வானூர்திப்படை, கடற்படை, மெரைன் படை உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 365 படையினர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரைப்படையைச் சேர்ந்த 247 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று கடற்படையை சேர்ந்த 63 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று வானூர்திப்படையை சேர்ந்த 36 பேரும் மெரைன் படைப்பிரிவை சேர்ந்த 19 வீரர்களும் படுகாயமடைந்துள்ளனர் .

மேலும், இந்தப் போர் நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் ஏற்பட்ட இழப்புகளே இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ceylon Petroleum Corporation
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!
Suresh Saleh
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!
meta
சிறுவர்களுக்கு ஆபத்தா? மெட்டாவுக்கு நீதிமன்றம் அதிரடி
power cut
மின்சாரத் தடையைத் தவிர்க்க வேண்டுமா? நாட்டு மக்களுக்கு வெளியான அறிவிப்பு!
jaffna police issue
யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
fuel
எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா 'ஒற்றை மற்றும் இரட்டை' இலக்க முறைமை?